முள்ளிவாய்க்காலில் வீட்டில் உறங்கியவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி இரு வீடுகளில் துணிகர திருட்டு!

38 0

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில்  இரு வீடுகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் நேற்று வியாழக்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்தில் இரு வீடுகளை குறிவைத்து அவற்றின் யன்னல்களை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள்,  உறங்கியவர்களை மயக்க மருந்து பயன்படுத்தி மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

இதன்போது தங்கங்க நகைகள்  மற்றும் 170, 000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதுடன் வீட்டாருக்கு காலை எழுந்த பின்னரே திருட்டு சம்பவம்  இடம்பெற்றுள்ளமை தெரியவந்ததுள்ளது.

இந்த திருட்டு சம்பவம்   தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிஸார் விசாரணையின் போது இரு சந்தேகநபர்களை  கைது செய்துள்ளனர்.