ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்

33 0

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட புகையிரத வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.