ஆலோசனை நடத்தியதற்கான காரணம் என்ன? – அமைச்சர் ஜெயக்குமார்

298 0

கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது, ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்த கருத்து குறித்தும் ஆலோசனை நடத்தியதாக அவர் கூறினார்.

அதிமுக கட்சியின் இரு அணிகளும் ஒன்று சேர்வது குறித்த ஆலோசனை நடத்தினால் அதில் பங்கேற்போம் என்று (அம்மா) அதிமுக கட்சியின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக (அம்மா) கட்சியின் அமைச்சர்கள் அளைவரையும் சென்னைக்கு அழைத்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர்கள் குழுவினர் இரண்டு, மூன்று குழுக்களாக இணைந்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் அமைச்சர் தங்கமணி வீட்டில் முக்கிய அமைச்சர்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது, ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்த கருத்து குறித்தும் ஆலோசனை நடத்தினோம் என்று அவர் கூறினார்.

பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்ற இந்த ஆலோசனையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க முதல்வரை இருமுறை சந்தித்த பின்னர் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை டெல்லி விரைந்துள்ளார். அதிமுக (அம்மா) கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.