வித்தியான கொலைச் சந்தேக நவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியல்

428 0

K800_20160726_104925புங்குடுதீவு மாணவி வித்தியான கொலைச் சந்தேக நவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.குறித்த வழக்கு இன்று செவ்வாக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மன்றில் வித்தியாவை கொலை செய்த 12 சந்தேக நபர்களும் முற்படுத்தப்பட்டிருந்தனர்.

அதே போன்று இக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரியும் மன்றில் தோன்றியிருந்தார்.இருப்பினும் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் வழக்குத் தொடர்பாகவும், அது சம்மந்தமாக நடைபெற்றுவரும் விசாரணைகள் தொடர்பாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினராலோ, சட்டத்தரணியாலோ, நீதவானினாலோ எந்தவிதமான சம்பாசனைகளும் நடைபெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் கொலைச் சந்தேக நபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி செவ்வாக்கிழமைவரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

K800_20160726_104917 K800_20160726_104919 K800_20160726_104920