ஹெரோயினுடன் கல்விசாரா ஊழியர் ஒருவர் கைது!

30 0

210கிராம் ஹெரோயினுடன் அரச பாடசாலையின் கல்விசாரா ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (15) மாலை வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதிமலுவ விகாரைக்கு அருகில் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விசாரா ஊழியராக பணிபுரியும் இவர், மிதிகம பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதுடன் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் வலையமைப்பை முன்னெடுப்பவர்களால் பெயரிடப்பட்ட நபர்களுக்கு போதைப்பொருளை விநியோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து போதைப்பொருள் பெறுபவர்களும் சிறிய அளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் பாடசாலை ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவராக இருந்த போதிலும், குறித்த பாடசாலை இந்த மோசடியில் ஈடுபடவில்லை எனவும் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை