நான் அரசியலில் இருக்கும் வரை அனுரகுமார ஜனாதிபதியாவதற்கு அனுமதிக்க மாட்டேன் – லொகான் ரத்வத்தை

28 0

நான் அரசியலில் இருக்கும்வரை ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாவதற்கு அனுமதிக்கமாட்டேன் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

தேர்தல்களில் தலையீடுகள் வன்முறைகள் குறித்த இலங்கையின் வரலாற்றை கருத்தில்கொள்ளும்போது இந்த அறிக்கையில் ஆபத்தான தொனி தென்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்;ண தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதை தடுப்பதற்கான உரிமை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை என எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ளாத அதேவேளை தேர்தலில் ஒரு வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதை தடுக்கும் அல்லது அனுமதிக்கும் உரிமை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை , என அவர் தெரிவித்துள்ளார்.

நான் அரசியலில் இருக்கும்வரை ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாவதற்கு அனுமதிக்கமாட்டேன் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.

அனுரகுமார திசநாயக்க தனது மக்களிற்காக சிறிய கால்வாயையாவது கட்டியிருக்கின்றாரா என கேள்வி எழுப்பியுள்ள அவர் நான் அரசியலில் இருக்கும்வரை அவர்ஜனாதிபதியாவதற்கு அனுமதிக்கமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.