இங்கிரியவில் கெப் வாகனம் மோதி பாதசாரி உயிரிழப்பு

28 0

களுத்துறையில் இங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இங்கிரிய – பாதுக்க வீதியில் இங்கிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இங்கிரியவில் இருந்து பாதுக்க நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிரிய பகுதியில் வசிக்கும் 48 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.