கொள்ளுப்பிட்டியில் விபத்து ; புதுமண தம்பதிகள் உட்பட 5 பேர் காயம்

38 0
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் புதுமண தம்பதிகள் உட்பட  ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

புதுமண தம்பதிகள் பயணித்த கார் ஒன்று மற்றுமொரு காருடன் மோதி பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது புதுமண தம்பதிகள் இருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த புதுமண தம்பதிகள் பயணித்த காரின் சாரதியும் மற்றைய காரின் சாரதியும் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த புதுமண தம்பதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.