பியூமி ஹன்சமாலியை கைது செய்வது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

29 0

சூட்சுமமான குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை கைது செய்ய முடியாது என சட்டமா அதிபர் மேல்முறையீட்டு நீதிமன்றில் இன்று (15) அறிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும்,பியூமி ஹன்சமாலிக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி பியூமி ஹன்சமாலி தாக்கல் செய்திருந்த மனு இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபிதா ராஜகருணா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், விசாரணைகள் முடிவடையும் வரை பியூமி ஹன்சமாலியை கைது செய்ய முடியாது என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த மனு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி மீள பரிசீலிக்கப்படும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.