பஸ் தரிப்பிடத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞர் பலி

32 0

களுத்துறை, மொரந்துடுவ பிரதேசத்தில் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ் தரிப்பிடத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞர் தனியார் உணவு தயாரிப்பு நிலைமொன்றில் பணியாற்றி வரும் நிலையில் பாணந்துறை பிரதேசத்தில் தனது வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரந்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.