தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பாக போட்டியிடுவதே எம் நிலைப்பாடு

36 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தேர்தலில் போட்டியிடுவதே தமது நிலைப்பாடு என்று ரெலோவின் பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எம்.பி. தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவிக்குச் செல்வம் அடைக்கலநாதனின் பெயரைப் பரிந்துரைத்த யோசனையைச் சிலர் அலட்சியம் செய்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கட்சியின் செயற்பாடுகளுக்கும், நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.