பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து ; மூவர் படுகாயம்

39 0

பதுளை – ஸ்பிரிங்வெளி வீதியில் இன்று (13) சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி முற்றிலும் சேதமடைந்துள்ளது.