நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது, யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக இந்த முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கரவண்டியின் பெற்றோல் ஒழுகியதால் திடீரென தீப்பற்றியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், முச்சக்கரவண்டி சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் நெல்லியடி பொஸிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.