துவிச்சக்கரவண்டியொன்று திடீரென வீதியில் பிரவேசித்தபோது, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் சற்றே விலக முற்பட்டுள்ளது. அவ்வேளையில் கார் வீதியை விட்டு விலகிச் சென்றதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எந்தவித காயங்களும் ஏற்படாத நிலையில் துவிச்சக்கரவண்டியின் ஓட்டுனருக்கு மாத்திரம் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
காயமடைந்த துவிச்சக்கரவண்டியின் ஓட்டுனர் புத்தளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.