மொஸ்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் 3 பேர் உயிரிழப்பு !

43 0
மொஸ்கோவில் சுகோய் சூப்பர்ஜெட் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மூவரும் விமான சிப்பந்திகள் என ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானம் கொலோம்னா நகருக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும் விபத்துக்கான காரணம் தெரியவரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் பிராந்திய பயணிகள் ஜெட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், சுகோய் சூப்பர்ஜெட் விமானத்தின் மூன்றாவது விபத்து இதுவாகும்.