யாழ். உணவகத்திற்கு சீல்

29 0

யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரு உணவங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வேளை, உணவகத்தில் காணப்படும் சுகாதார குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.