இங்கிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர் கைது

21 0

களுத்துறையில் இங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்ஹேன பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 மற்றும் 36 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 7.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும்  1,045 லீற்றர் கோடா ஆகிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.