ஐதராபாத், பெங்களூரு அளவுக்கு நாம் இல்லை – பழனிவேல் தியாகராஜன்

37 0

தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் ராஜா கூறியது போல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செல்ல இருக்கிறார்.

தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், தலைவர்கள், தொழில் நுட்பத்தை உருவாக்குபவர்கள் என அந்த துறையில் உள்ளவர்களை சந்திக்க உள்ளார்.நான் சட்டசபையில் கூறியது போல் 100 சதுர அடியில் கட்டிடமும், இணையதள வசதியோ, மின்சாரமும் இருந்தா தொழில் நுட்பத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொரானா முடிந்து 2 வருடங்களில் உலகளாவிய திறன் மையங்கள் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அப்படியென்றால் பல 10,000 வேலைகள் உருவாக்கி உள்ளனர்.

கடந்த ஆண்டு நான் கூறியது போல 40 லட்சம் சதுர அடியில் புதிய ஐடி பார்க் அலுவலகம் குத்தகைக்கு எடுக்கப்படும் என்று சொன்னேன். ஆனால் சென்ற ஆண்டு 110 லட்சம் சதுரஅடி புதிய அலுவலகங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு அதில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் சட்டமன்றத்தில் கூறியது போல் தொழில்நுட்பத்திற்கு நமக்கு ஒரு ஆண்டுக்கு 100 முதல் 120 கோடி தான். ஆனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 800 முதல் ஆயிரம் கோடி ஒதுக்கும் நிதியானது குறைவாக உள்ளது.

ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தில் நாம் தான் முதலிடத்தில்  “இருந்தோம்.. ஆனால்., இப்போது ஐதராபாத், பெங்களூரு அளவுக்கு நாம் இல்லை என்றே கூற வேண்டும்.அதேபோல் நாம் மாநிலத்திற்கு வெவ்வேறு தொழில்கள் உள்ளன. அனைத்து துறைகளில் முன்னேறி இருக்கிறோம்.

இந்த தொழில்நுட்ப துறையை பொருத்தவரை கடந்த ஆண்டு என்னால் முடிந்த முன்னேற்றங்களை கொடுத்து வருகிறேன். இன்னும் சிறப்பாக என் துறையை செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் .