தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024 -சுவிஸ் 07.07.2024

199 0

தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த இளையோர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் மென்பந்து துடுப்பாட்ட போட்டிகள் கடந்த 07.07.2024 அன்று சூரிச் மற்றும் பேர்ண் மாநிலங்களில் சிறப்பாக நடைபெற்றது.சீரற்ற காலநிலை காணப்பட்டபோதும் மாவீரர் நினைவு சுமந்த போட்டியென்பதால் அனைத்துக்கழகங்களும் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர்.

காலை 8.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு,ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தி மலர் வணக்கத்துடன் காலை 9 மணிக்கு போட்டிகள் ஆரம்பமானது.துடுப்பாட்டப்போட்டிகள் 10.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது சீரற்ற காலநிலை காரணமாக கரப்பந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான சுவட்டு மைதான மெய்வன்மைப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

இறுதியாக வெற்றிபெற்ற கழகங்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு சீரற்ற காலநிலையினையும் பொருட்படுத்தாது சுற்றுப்போட்டிக்கு வருகை தந்து சிறப்பித்த கழகங்களுக்கு நன்றி தெரிவித்து எமது தாரக மந்திரத்துடன் போட்டிகள் இனிதே நிறைவு பெற்றது.
தமிழீழ விளையாட்டுத்துறை
சுவிஸ் கிளை
10.07.2024