அதிபர், ஆசிரியர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!

30 0

அதிபர், ஆசிரியர்கள், முன்னெடுக்கும் சுகவீன விடுமுறைப் போராட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் இன்றைய தினம் அதிபர்கள், ஆசிரியர்கள் வருகைதந்துள்ள நிலையில் மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுவதாகவும், பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.