பாடசாலை கல்வி நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

38 0

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் நடைபெற்றாலும் இன்று மற்றும் நாளை பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று மற்றும் நாளை சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இந்நிலையில் குறித்த தொழிற்சங்க போராட்டங்களில் ஆசிரியர்கள் இணைந்துகொண்டாலும் கல்வி நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.