உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் கைது !

72 0

தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பிரதேசத்தில்  சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட  பொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவரிடமிருந்து  கைத்துப்பாக்கி  , 12 வகையான  ரவைகள்,  கத்திகள் ,  13 கஞ்சா செடிகள்  என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .