10 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களைத் திருடிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

50 0

கொஸ்கம பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களைத் திருடிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது  செய்யப்பட்டுள்ளார். 

திருடப்பட்ட பொருட்களிலிருந்த கை ரேகைகள்  கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுடைய கைரேகையுடன் ஒத்துப் போனமையால் இவர் கைது செய்யப்பட்டதாக கொஸ்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்  அவிசாவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது .

கடந்த  ஏப்ரல் மாதம் 28ம் திகதி  இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த  கைரேகைகளைக் கைரேகை துறைக்கு விசாரணைக்காக அனுப்பியதையடுத்து  சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள்  கைது செய்யப்பட்டுள்ளார்.