பெரஹெராவில் யானை தாக்கி யானைபாகன் வைத்தியசாலையில் அனுமதி!

44 0

வாதுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நடைபெற்ற பெரஹெராவின்போது யானை தாக்கி யானைபாகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விகாரையில் இருந்து பெரஹெரா ஆரம்பித்து கடற்கரை பாதையினூடாக காலி வீதிக்குப் பிரவேசிக்கும்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடும் முயற்சியின் பின்னர், பெரஹெராவிலிருந்து யானை அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.