வவுனியா பல்கலையின் கல்வி சாரா ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

39 0

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் சத்தியாக்கிரக போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர். அந்த வகையல், வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று (6) கருப்பு நிற உடையடைந்து, கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுவரும் நிலையில், துணைவேந்தர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக  மானிய ஆணைக்குழுவுக்கு எவ்வித தகவலையும் தமது சார்பில் வெளியிடவில்லை என்பதை கண்டித்தும் இந்த கருப்புக்கொடி போராட்டத்தினை நடத்தியுள்ளனர்.

இதேவேளை பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதியோரங்களில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

அத்தோடு, துணைவேந்தர்கள் வருகை தந்தபோது வரிசையாக நின்று தமது எதிர்ப்பினையும் கல்வி சாரா ஊழியர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.