நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

39 0

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்வத்தை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் நேற்று (5) கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஸன்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 450 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.