சாகல ரத்னாயகவின் வாகன தொடரணியை கையடக்கத் தொலைபேசியில் காணொளி எடுத்த இளைஞர் கைது !

30 0

ஜானாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்கவின் வாகன தொடரணியை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கொள்ளுப்பிட்டி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்தவர்  என்பதுடன்  இவரிடமிருந்த கையடக்க தொலைபேசியும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர் 44 வயதுடைய நபர்ரொருவருடன் துபாய் தூதரகத்திற்கு வருகை தந்தவர் எனவும், இதற்கு முன் இவ்வாறான வாகன தொடரை கண்டதில்லை என்பதால்   கையடக்கதொலைபேசியில்  காணொளி எடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.