வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1, 700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி

56 0

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1, 700 ஆக அதிகரிப்பது தொடர்பில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுத்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்தது. இது தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றம் செயற்பாடகவே உள்ளது என  வேலுசாமி இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.