இதன் காரணமாகக் குறித்த 5 வீடுகளிலும் வாழ்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் தத்தமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
எவ்வித உயிர் ஆபத்துகளும் ஏற்படவில்லை என்றும் வீடுகளிலிருந்த ஒரு சில சொத்துக்களுக்கு மாத்திரம் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை (4) 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு தற்போது தீப்பறவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
மின் ஒழுக்கில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே தீப்பறவள் சம்பவித்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.