காட்டு யானைகள் பெருமளவான விவசாய நிலங்களை அழித்து நாசம் செய்துள்ளன

27 0
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட ஊரியான் குளத்தின் கீழ்   மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையினை காட்டு யானைகள் தொடர்ச்சியாக அளித்து நாசம் செய்துள்ளன.

கண்டாவளை பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட ஊரியன்குளத்தின்  சிறு போக்க நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில்  குறித்த பயிர்செய்கைகளை  தொடர்ச்சியாக காட்டு யானைகள் அழித்து வருகின்றன.

புதன்கிழமை (3) இரவு குறித்த பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் பெருமளவான விவசாய நிலங்களை அழித்து  நாசம் செய்துள்ளன.