ஜகர்த்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம்

36 0

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இலங்கை விமானம் ஒன்று வியாழக்கிழமை (04) அவசர மருத்துவ காரணத்திற்காக தரையிறக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து இருந்து கொழும்பு நோக்கி வந்த UL605 என்ற விமானம் இந்தோனேசியாவின் தெற்கே பயணித்தபோது விமானக் குழுவினர் பொது அவசரநிலையை அறிவித்தனர்.

இந்நிலையில் விமானம் உள்ளூர் நேரப்படி 20:56 மணிக்கு ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானம் மெல்போர்னில் இருந்து தாமதமாவே புறப்பட்டுள்ளது.

எனினும், மருத்துவ காரணம் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.