மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது இளைஞர் பலி

40 0

கம்பஹா பிரதேசத்தில் படல்கம  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவீரு பீரிஸ் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (3) புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கெஹெல்எல்ல பகுதியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த தொலை தொடர்பு கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் காயமடைந்துள்ள நிலையில் திவுலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் திவுலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் படல்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.