பாணந்துறை கடலில் நீராடிக்கொண்டிருந்த நபர் மரக்கட்டை மோதி உயிரிழப்பு

34 0
பாணந்துறை கடலில் நீராடிக்கொண்டிருந்த நபரொருவர் மரக்கட்டையில் மோதி உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக  பாணந்துறை  தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.