புதிய திட்டங்களுடன் ஆரம்பிக்கப்படும் யுக்திய நடவடிக்கை

40 0

யுக்திய நடவடிக்கையானது இன்று வியாழக்கிழமை  (04) முதல்  புதிய திட்டங்களுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுக்திய நடவடிக்கைக்கு இலங்கை இராணுவத்தின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் காலங்களில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில்  நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.