இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது

25 0

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாபாகே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 25,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற போது  கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் இல்லாத காசோலையை வழங்கி நபரிடம் இருந்து தவணை முறையில் பணத்தை பெற்று தருவதாக கூறி அவர் இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.