முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் விளையாட்டுப்போட்டி 2024

250 0

முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் விளையாட்டுப்போட்டி இவ்வாண்டு 29.06.2024 சனிக்கிழமை முன்சன் நகரத்தில் வாழும் தமிழ் மக்களை இணைத்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யேர்மனி நாட்டின் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கியது.
முன்சன் தமிழாலயத்தின் பெற்றோர், ஆசிரியர்கள். மாணவர்கள் மற்றும் நகரத்தில் வாழும் தமிழ் உறவுகள் வருகைதந்து சிறப்பித்தனர். மெய்வல்லுநர் போட்டிகளுடன் யேர்மனியின் மற்றைய நகரங்களிலிருந்து வருகை தந்திருந்த உதைபந்தாட்டக் குழுக்களிடையேயான உதைபந்தாட்டப் போட்டி மற்றும் கரப்பந்தாட்டப் போட்டியும் நடைபெற்றது. போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற போட்டியாளர்களுக்கும் குழுக்களுக்கும் பதக்கங்களும் புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன. நிறைவாகத் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் விளையாட்டுப்போட்டி நிறைவுபெற்றது.