தேசிய அரசாங்கம் அமைக்க ஆதரவளிக்கப் போவதில்லை:ஐ.ம.ச

39 0

தேசிய அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயன்றால் அதற்கு ஆதரவளிப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி முடிவெடுத்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் புத்திக பத்திரண எம்.பி முன்மொழிந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகிறார் என தெரிவிக்கப்படும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.