63,818,452 ரூபா பண மோசடி செய்ததாகக் கூறப்படும் பெல்ஜியம் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதுடைய பெல்ஜியம் பிரஜையொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வியாபார நடவடிக்கைகளுக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி நபரொருவரிடமிருந்து 63,818,452 ரூபா பணத்தைப் பெற்று அதனைத் திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.