பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர்பதிவியில் இருந்தும், கட்சி உறுப்புரைமையில் இருந்து நீக்குவதற்கு கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை இடைநிறுத்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை இன்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.