வாள், கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ; இரு நண்பர்கள் தப்பியோட்டம்

30 0
கையடக்கத் தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூன்று நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட  தகராறில் வாள் மற்றும் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 10, மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்டவர் கடந்த 28 ஆம் திகதி தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து தனது வீட்டின் மேல் மாடியில் மதுபானம் அருந்தியுள்ளார்.

இதன்போது, கொலை செய்யப்பட்டவரது நண்பர்களில் ஒருவர் அவரது வீட்டிலிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றை திருடிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, கொலை செய்யப்பட்டவர் தனது நண்பர்கள் இருவரையும் அழைத்து அவர்களை முழங்காலில் நிற்க வைத்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த நண்பர்கள் இருவரும் வாள் மற்றும் மன்னா கத்தியுடன் முச்சக்கரவண்டியில் கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டிற்குச் சென்று அவரை தாக்கி தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.