சீனாவுக்கு சென்ற மஹிந்த ராஜபக்ஷ நாட்டை வந்தடைந்தார்!

26 0

சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (1) திங்கட்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தார்.

இவர் நேற்று (1) இரவு 11.10 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவர் கடந்த 28ஆம் திகதி சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோருடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.இலங்கையின் வளர்ச்சிக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கும் என தெரிவித்தார்.