நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் இருவரும் கைது

28 0
சிறைச்சாலை அதிகாரிகளை தாக்கிவிட்டு நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற கைதிகளில் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்ளையிட்டு 65 கிலோமீற்றர் தூரம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற இரு கைதிகளில் ஒருவர் வனப்பகுதியொன்றில் தலைமறைவாகியிருந்த போது மொரகஹஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொனபொல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தப்பிச் சென்ற மற்றைய கைதி கேகாலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைதிகளும் இருவரும் கடந்த 28 ஆம் திகதி வரக்காபொல துல்ஹிரிய நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சிறைச்சாலை அதிகாரிகளை தாக்கிவிட்டு நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.