தங்காலை பாலத்திற்கு அருகில் 03 கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் ஒருவர் தங்காலை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.