இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

28 0

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30 மணிக்கு விசேட அமர்வுக்காக கூடுகின்றது. இதன்போது ஜனாதிபதியின் விசேட உரை மாத்திரமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உரை மற்றும் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் பூதவுடலை இறுதி அஞ்சலிக்காக நாளை புதன்கிழமை (03) பாராளுமன்ற வளாகத்துக்கு எடுத்து வருவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.