கல்கிஸ்ஸை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் இருவர் மீட்பு – ஒருவர் மாயம்!

26 0

கல்கிஸ்ஸை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் இருவர் நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளாதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

17 வயதுடைய  அபேசேகர மாவத்தை, கல்கிஸ்ஸை பகுதியில் வசிக்கும் நபரொருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை கல்கிஸ்ஸை கடலுக்கு நீராடச் சென்ற நபர்களில் மூவர் திடீரென கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியிலிருந்த கடற் படையின் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மூவரில் இருவரை காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.