வெயாங்கொடையில் புதையல் தோண்டிய இருவர் கைது

27 0

கம்பஹா பிரதேசத்தில் வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இருவர் சந்தேகத்தின் பேரில் இன்று (1) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வேயங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹாபாகே மற்றும் ராகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50 மற்றும் 54 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெயாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.