ஹிருணிக்காவின் பிணை மனு மீதான விசாரணை 4 ஆம் திகதி

29 0
தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட கால கடூழியச் சிறைத்தண்டனையை நீக்கி தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், சிறைத்தண்டனையை நீக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தன்னை பிணையில் விடுவிக்குமாறு ஹிருணிக்கா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பிணை மனு எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.