வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி மாதோவ தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

40 0

வீதியை புனரமைத்து தருமாறு மாதோவ தோட்ட மக்கள் இன்றைய தினம் (01) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பசறை மடுல்சீமை வீதி மாதோவ சந்தியில் இருந்து மாதோவ கீழ் பிரிவின் ஊடாக லுணுகலை செல்லும் சுமார் 7 கிலோமீட்டர் வரையிலான வீதியை புனரமைத்து தருமாறு இன்றைய தினம் மஹதோவ கீழ் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வீதியை புனரமைத்து தருவதாக கூறி பல அரசியல்வாதிகள் அடிக்கல் நாட்டியதாகவும் ஆனால் இதுவரை வீதி புனரைமைத்து தரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.