களுத்துறையில் வேன் விபத்து ; 7 பேர் காயம்

40 0
மத்துகம – களுத்துறை வீதியில் யடதொலவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சாரதி உறங்கியதால் வேன் கட்டுப்பாட்டை இழந்து லொத்தர் சீட்டுகளை விற்பனை செய்யும் கடையொன்றடன் மோதி பின்னர் அருகிலிருந்த சுவரொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ள நிலையில் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.