இரு தினங்கள் விசேட அமர்வு!

31 0

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்காக நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட பாராளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவே, விசேட பாராளுமன்ற அமர்வை கூட்டுவதற்கான அங்கிகாரத்தை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில், நாளை விசேட உரையை ஆற்றியதன் பின்னர், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பிலான விவாதமும் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.